Saturday, October 18, 2014

பீடை


மனிதனுக்கு அல்லது மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள், பயிரிடப்படும் பயிர்கள்,பொருட்கள் ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பொருளாதாரரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் உயிரிகளே பீடைகளாகும்.
பீடைகள் பிரதானமாக மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தப்படும்.

1. பூச்சிகளும் பூச்சிகளல்லாத விலங்குகளும்.
2. களைகள்
3. நோயாக்கிகள்

பீடை நிலைமை ஏற்படல்

இயற்கைச் சூழற்றொகுதியிலுள்ள விலங்குகளும் தாவரங்களும்; பல்வேறு
இடைத்தொடர்புகள் மூலம் சூழற்றொகுதியின் சமநிலையைப் பேணும். இது இயற்கைச் சமநிலை எனப்படும். இச்சமநிலை பேணப்படுவதற்கு உணவூ, காலநிலை நிலைமை, உயிரிகளிடையே நிகழும் போட்டி, உயிரிகளிடையேயான  இடைத்தொடர்புகள் போன்றன முக்கியமானவையாகும்.
 உயிரிகளிடையே ஒட்டுண்ணியியல்பு, இரைகௌவல், ஒன்றியவாழ்வூ, நோய்வாய்ப்படல் போன்ற இடைத் தொடர்புகள் நிகழும். மேற்படி காரணிகளுள் ஒன்று அல்லது பலவற்றின் தாக்கத்தால் யாதேனும் உயிரியின்
குடித்தொகை அடர்த்தி அதிகரிக்குமானால் அல்லது குறையூமானால் ஏனைய காரணிகளின்
தாக்கத்தால், சிறிது காலத்தின் பின்னர் அது சமநிலையடையூம். இது இயலளவூச் சமநிலை மட்டம்  எனப்படும். விவசாயநடவடிக்கைகளின் போது மேற்படி சூழற் காரணிகள் மாற்றமடைந்தால் சில உயிரிகளின் குடித்தொகை பெருமளவூ அதிகரிப்பதுடன் சிலவற்றின் குடித்தொகை பெருமளவில் குறைந்து போகும். இவ்வாறு அதிகரிக்கும் உயிரிகள் விவசாய நடவடிக்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பீடைகளாகலாம்.

பீடை நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள்

  1. விவசாய நடவடிக்கைகளுக்கென இயற்கைத் தாவரங்களை அழிக்கப்படல். இதனால் இயற்கைச் சூழலில் வாழும் அங்கிகள் அச்சூழலிலிருந்து அற்றுப்போதல்.
  2.  பண்ணையில் உயிரிப் பல்வகைமை குறைவாகையால் இயற்கை எதிரிகள் குறைவடைதல்.
  3. பயிர்செய் நிலங்களில் தனியொரு பயிரை அல்லது தெரிவூசெய்த சில
  4. பயிர்வகைகளை மட்டும் பயிரிடல்.
  5. தொடர்ச்சியாக ஒரே பயிரைப் பயிரிடல்.
  6. பாரம்பரிய பயிர்ச்செய்கையைக் கைவிடல்.
  7. தாவரங்களையூம் விலங்குகளையூம் அகற்றுதல்.


பீடைக் கொள்ளை நிலை

குறுகிய காலப் பகுதியில் குறிப்பிட்ட பீடையின் குடித்தொகையானது பொருளாதாரச் சேத மட்டத்தை விட அதிகரித்து பெருமளவில் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் பீடைக் கொள்ளைநிலை எனப்படும். இந்நிலையில் பீடைக்கட்டுப்பாடு சிரமமாக அமைவதுடன் அதிக செலவூம் ஏற்படும். இந்நிலை ஏற்ப்படுவதற்கான காரணங்கள்
  1. பிறிதொரு சூழலிலுள்ள புதிய ப+ச்சி இனமொன்று புதிய சூழலுக்கு வருதல்.
  2. விகாரம் காரணமாகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூச்சியினங்கள் உருவாதல்.
  3. அதிக பசளைப் பயன்பாடு காரணமாகத் தாவரப் பாகங்கள் சதைப்பற்றடைந்து
  4. மென்மையடைவதனால் அதில் தங்கி வாழும் அங்கிகளின் குடித்தொகை அதிகரித்தல்.
  5. அதிக விளைச்சலைக் கொண்ட பயிர்ப் பேதங்கள் பீடைகளுக்குக் குறைந்தளவில் தாக்குப் பிடித்தல்.
  6. முறையற்ற பீடைநாசினிப் பயன்பாடுஇ தொடர்ச்சியாக ஒரே பூச்சிநாசினியைப் பயன்படுத்தல் ஆகியன காரணமாகப் பூச்சிநாசினிகளுக்கு எதிர்ப்புத் தன்ம கொண்ட பூச்சியினங்கள் உருவாதல்.
  7. பீடைகளுக்குச் சாதகமான சூழல் நிலவூவதனால் அவை அளவூக்கதிகமாகப் பெருகுதல்.
  8. விவசாய இரசாயனப் பொருட்களின் பயன்பாடு காரணமாகக் குறிப்பிட்ட சூழலில் வாழும் பீடைகளின் இரைகௌவிகளும் ஒட்டுண்ணிகளும் அழிவடைவதனால் பூச்சிகள் அதிகம் பெருகுதல்.






நன்றி : தொழினுட்பக் கல்விப் பிரிவூ
விஞ்ஞான,தொழினுட்ப பீடம்
தேசிய கல்வ்வி நிறுவகம்
மகரகம
2013

Wednesday, October 15, 2014

பாடசாலைதிறம்பட இயங்குவதில் அதிபரின் முகாமைத்துவ வகிபாகம்


முகாமைத்துவம் என்பது ஒருநிறுவனத்தையும் அதன் ஆளணியினரையும் நிர்வகிப்பது அல்லது மேற்பார்வை செய்வதுமாத்திரமன்று அந்நிறுவனங்களுக்குத்  தேவையான பொருத்தமான ஆளணியையும் பௌதிக உள்ளகக் கட்டமைப்பையும் பேணுவதன் மூலம் ஒழுங்கான மேற்பார்வை கண்காணிப்பு என்பனவற்றுடன் ஊழியர்களின் தனிப்பட்ட நலன்களைப் பாதுகாத்து அவர்களைத் திருப்திப்படுத்துவதன் மூலம் அந்த நிறுவனத்தின் உச்சவெளியீட்டை அதிகரிப்பது தான் முகாமைத்துவம் ஆகும்.

  • 'வரையறுக்கப்பட்ட வளங்களை  (மனித,பௌதீக) கொண்டு ஒரு நிறுவனம் எவ்வாறு தனது குறிக்கோளை அடைந்து கொள்ளமுடியும் என எடுத்துக் கூறும் கலை தான் முகாமைத்துவம்  என ஈ.எல்.பிரெச் கூறியுள்ளார். பொதுவாக ஒரு முகாமைத்துவம்  பின்வரும் நான்கு மூலகங்களைக் கொண்டிருக்க வேண்டும்.
  • திட்டமிடல், ஒழுங்கமைப்பு, தலைமைத்துவம் , கட்டுப் படுத்தல்
இவ்வாறு கோட்பாட்டு ரீதியாக பாடசாலைகளில் முகாமைத்துவத்தை நிர்வகிக்கின்ற போது அப்பாடசாலைகளின் பெயர் உயர் மட்டத்தை அடைவதை நாம் அவதானிக்க முடியும்.

ஒருநிறுவனத்தின் தலைவருக்கு இருக்கவேண்டிய பண்புகள், அவரின் நடிபங்கு என்பவற்றை பல்வேறு அறிஞர்களும் முகாமைத்துவக் கற்கை ஊடாக வெளிப்படுத்தியுள்ளனர். அவ்வாறான கோட்பாடுகள் என்ன கூறுகின்றன? அக்கோட்பாட்டிற்கு இசைவாக நமது பாடசாலை நடைபெறுகின்றதா? பாடசாலையின் முகாமையாளர் அதனைச் சரிவரசெய்கின்றாரா? என நாம் படம் போட்டுப் பார்க்கின்ற போது பாடசாலையின் முகாமைத்துவ நிருவாக அமுல்படுத்தலில் பல காரணங்கள் தடையாக அமைவதை நாம் அவதானிக்க முடியும். அவற்றில் சிலவற்றை நாம் தொட்டுச் செல்கின்ற போது அடையாளப்படுத்தவேண்டிய விடயங்களாக சிலவற்றை நாம் நோக்க முடியும்.

வாண்மை விருத்தியில்லாத ஆனால் அனுபவம் வாய்ந்த அதிபர்கள் இதே போன்று அனுபமற்ற வாண்மை விருத்தியுள்ள அதிபர்கள் நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகளில் மேற்கூறியவற்றில் ஒன்று இருந்து மற்றொன்று இல்லாத போது அவர் நிருவாகத்தில் சில சிக்கல்களை எதிர்நோக்கவேண்டியுள்ளது. இதே போன்று அனுபவமும் வாண்மை விருத்தியும் உள்ள ஒரு அதிபருக்கு அரசியல் தலையீடுகள் நிருவாகத்தை அமுல்படுத்துவதற்கு தடைகளாக உள்ளதையும் நாம் சுட்டிக்காட்டாமல்  இருக்கமுடியாது.

இவ்வாறு பலதலையீடுகளை ஒருமுகாமையாளர் எதிர்நோக்குகின்ற போது ஒரு சிறந்தமுகாமையாளர் என்ற வகையில் அதிபர் இவ் விடயங்களுக்கு அப்பால் தனது போக்கை மாற்றி தனது நிறுவனம் வளர வேண்டுமென்ற கொள்கை அதிபரிடம் இருக்குமானால் அவரால் முடியாதென்ற விடயம்  உடைத்தெறிந்து அப்பாடசாலைகட்டியெழுப்பப்படும்.

அதிபர் Boss என்ற நிலையிலிருந்து விடுபட்டு Executive Officer 
என்ற நிலைக்கு வரவேண்டும். ஏனென்றால் ஒரு பாடசாலை குடும்பத்தில் அனுபவம் வாய்ந்த வயது முதிர்ந்த ஆசிரியர்களும் வாண்மை விருத்தியுள்ள இளம் ஆசிரியர்களும் இருப்பர். இவர்களின் ஆற்றலையும் அனுபவத்தினையும் அதிபர் பெற முயற்சிக்க வேண்டும். இந்த அடிப்படையில் அதிபர் ஒருநிறைவேற்று நிருவாகி என்றவகையில் சில கோட்பாட்டை மையமாக வைத்து முகாமைத்துவத்தை மேற்கொள்கின்ற போது பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

இதனடிப்படையில் மினிஸ்பேக்கின் நடிபங்குக் கோட்பாடு ரீதியாகபாடசாலை நிருவாகத்தை அமுல் படுத்துகின்ற போது சிறப்பான முகாமைத்துவ நிருவாகத்தை நடைமுறைப்படுத்த முடியும். மினிஸ்பேக் பிரதான மூன்று நடிபாகங்களூடாக பத்து நடிபங்குகளை முன்வைத்துள்ளார்.
பிரதானநடிபங்கு

ஆளிடைத் தொடர்பு நடிபங்கு, தகவல் தொடர்புநடிபங்கு, தீர்மானமெடுத்தல் நடிபங்கு.
பாடசாலையில் அதிபரின் தொழிற்பாடுகளை பிரதானமாக மூன்றுதலைப்பின் கீழ் இனங்காணலாம். தொழிற்பாடுகளைமேலும் விரிவாகஅவர் எடுத்துக் கூறியுள் ளார்.

 1. ஆளிடைத் தொடர்புநடிபங்கு
  •  தலைமைத்தவம்
  •   தலைவர்
  •    இணைப்பாளர்
2. தகவல் தொடர்புநடிபங்கு
  •   கண்காணிப்பாளர்  
  •  தகவல் பரப்புனர்  
  •  பேச்சாளர்
3. தீர்மானம் எடுத்தல் நடிபங்கு
  •  முயற்சியாண்மையாளர்
  •   பிரச்சினையைக் கையாள்பவர்
  • வளஒதுக்கீட்டாளர்
  •   பேசித் தீர்ப்பவர்

Thanks :
       V.Prashanthan 
      Under Graduate  
  Department of Education
 Faculty of Arts and Culture
Eastern University, SriLanka
 075-2354616 / 071-3142200

உளவளத்துணையும் சிக்மண்ட் பிறைட்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையும்


இன்றைய சமூக அமைப்பில் உளவளத் துணை முக்கியத்துவமான ஒரு துறையாகக் காணப்படுகின்றது. இன்று அதிகமானவர்களால் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக உளவளத் துணை என்ற சொல் காணப்படுகின்றது. இயற்கை அனர்தங்கள்இ போர்ச் சூழ்நிலைஇ மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் உளஇ சமூகப் பிரச்சினைகளும் இதன் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

மனித வாழ்க்கையானது முரண்பாடுகள்இ பிரச்சினைகள் ஆகியவற்றோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப் படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள்இ போர் வன்முறைகள்இ தனிமனினுக்கும் சமூகத்திற்கும் இடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகள் போன்றன மனிதனின் உடல்இ உளஇ குடும்ப நலன்களை பெரிதும் பாதிக்கின்றன.

உண்மையில் உளவளத் துணையின் நோக்கம் இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதாகும். இது மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு வழிமுறை ஆகும். குறிப்பாக உணர்ச்சிக் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளித்தல் இதன் நோக்கமாக காணப்படுகின்றது.

பொதுவாக உளவளத்துணை என்னும் போது பிரச்சினைக்கு உட்பட்ட ஒரு நபருக்கு அவரிடமே மறைந்திருக்கும் வளமான திறன் கள்இ பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவருக்கு அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு முறை எனக் கூறலாம். இவ் உளவளத் துணையானது இன்றைய சமூகத்திற்கு ஏன் அவசியமானதாக காணப்படுகின்றது எனப் பார்ப்போமாயின் தனியாக தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றிற்கு தீர்வொன்றை தேடிக் கொள்வதற்கு, தனியாள் ஆளுமையை கட்டி எழுப்புவதற்கு, பிரச்சினைக்குட்படுகின்ற சந்தர்ப் பங்களில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு,மற்றுமொருவருக்கு சொல்ல முடியாத விடயங்களை நம்பிக்கையான ஒருவரிடம் கூறுவதன் மூலம் உள்ளத்தினை அமைதிப்படுத்துவதற்கு, சரியான தீர்மானத்திற்கும் தீர்வுக்கும் வருவதற்கு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

உளவளத்துணை செயற்பாடானது பின்வரும் மூன்று வழிகளில் நடை பெறுகின்றது.
1. தனியாள் உளவளத்துணை
2. குடும்ப உளவளத்துணை
3. குழு உளவளத்துணை

இவ்வாறான உளவளத்துணை முறை களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கு உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட உளவியல் அணுகு முறைகள் பெரிதும் உதவுகின்றன. அவ்வாறான அணுகு முறைகளுள் சிக்மன் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகு முறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

மனித நடத்தைக்கும் உள்ளத்தின் செயற்பாட் டிற்கும் உள்ள தொடர்பினை உளவியலாளர் களும்இ தத்துவவியலாளர்களும் கிரேக்க காலம் முதலே ஆராய்ந்து வந்து இருப்பதனைக் காணலாம். அவர்களுள் முதன்மையான வராக சிக்மண்ட் பிறைட் (ஷிபைசீரnனீ பிசலீரனீ) காணப்படுகின்றார். உளவளத்துணை தொடர்பாக இவரால் முன்வைக் கப்பட்ட அணுகுமுறைதான் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை (ஜிளலணீhழ தியெடலவiணீ திppசழயணீh) ஆகும்.

இவ் அணுகுமுறையின் படி ஒரு நபரின் நடத்தைக்கும்இ செயற்பாட்டிற்கும் உள்ளம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதாகும். குறிப்பாக உளப் பிரச்சினை ஒன்று ஏற்பட்ட பின்னர் உள்ளம் செயற்படும் தன்மையை அடிப்படையாக வைத்து மனிதர்களின் செயற் பாடுகளும் அமைவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது 'உள்ளம்' என்பதாகும். இவ்வாறு மனிதனுடைய நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் உள்ளத்தினை பிறைட் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரித்துள்ளார்.

1. நனவு மனம்
2. நனவடி மனம்
3. நனவிலி மனம்

பிறைட் தனது இறுதிக் காலப் பகுதிகளில் உள்ளத்தின் செயற்பாடுகளை வேறு முறைகளில் விளக்கியுள்ளார். தனது விளக்கத்தில் உள்ளத் தினை மூன்று பகுதிகளாக பிரித்துள்ளார்.
1. இட்
2. ஈகோ
3. சுப்பர் ஈகோ

இங்கு இட் என்பது ஒருவருக்கு பிறப்பிலே கிடைக்கும் ஒரு நிலையாகும். நீண்ட காலமாக ஞாபகத்தில் படிந்துள்ளவைகள் இட் மூலமாக வெளிப்படுவதாக பிறைட் கூறுகிறார். மேலும் யினீ எப்போதும் வாழ்வியல் இயல்பூக்கம்இ மரண இயல்பூக்கம் எனும் இரண்டு இயல்பூக்களின் அடிப்படையில் செயற்படுவதாகும் எனவும் பிறைட் கூறுகின்றார். ஈகோ என்பது ஒருவரது தர்க்க ரீதியில் அமையும் புத்தியாகும். சூழல் மற்றும் யினீ என்பவற்றுக்கிடையே நடைபெறும் முரண்பாடுகளை கட்டுப்படுத்தி உள்ளத்தினை சாதாரண நிலைக்கு கொண்டுவருதல் இதன் செயற்பாடாகும். சுப்பர் ஈகோ என்பது ஒழுக்கம்இ விழு மியம்இ மதம்இ கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் வளரும் ஒன்றாகும். இது யினீ செய்யும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு முனையும்.

இவ்வாறு உள்ளத்தின் செயற்பாடு களை விளக்கிய பிறைட் இவ் அணுகு முறையினூடாக ஆளுமை தொடர்பாக வும் விளக்கி உள்ளார். ஒருவரது ஆளுமையை விளங்கிக் கொள்வதற்கு அவனது உணர்வுகள்இ மனப்பாங்குகள் போன்றவற்றை சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும் என பிறைட் கூறுகின்றார்.

பிறைட்டினால் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை விளக்கப்பட்டிருப்பதனை நாம் காணலாம். இவ் அணுகு முறை யானது உளவளத்துணை செயற்பாட்டி ற்கு அதிகமான பங்களிப்பினைச் செய்கின்றது எனக் கூறினால் அது தவறாகாது. உள ரீதியான பிரச்சினை ஏற்படுகின்ற போது இப்பிரச்சினைகளை ஆராயவும்இ உளவளத்துணை செயற்பாட்டினை இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கும் உதவுகின்றது. பிறைட் தனது கோட்பாட்டின் மூலம் பின்வரும் உளவளத்துணை நுட்பங்களை முன்வைத்திருந்தார்.

1. மனோவசியம்
2. சுயாதீன கூட்டுச் சேர்வு
3. கனவு விளக்கம்

இவற்றின் மூலமாக ஒரு நபரில் மறைந்திருக்கும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதற்கு பிறைட் முன்வந்து இருந்திருந்தார். இந் நுட்பங்களுள் மனோவசிய முறையானது பிற்பட்ட காலங்களில் பிறைட் கைவிட்டபோதிலும் சுயாதீனக் கூட்டுச் சேர்வு மூலம் மறைந்து கிடக்கும் பல அம்சங்களை தேடிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறே கனவு விளக்கமும் முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒரு நபர் காணும் கனவு களை குறியீடாகக் கொண்டு பகுப்பாய்வு செய்து பல அம்சங்களை பெற்றுக்கொள்ள பிறைட் முற்பட்டிருந்திருந்தார்.
இம் மூன்று நுட்பங்களும் உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினைகளை இனம் கண்டு உளவளத் துணை செயற்பாட்டினை இலகுபடுத்த உதவும் என்பதில் ஐயம் இல்லை எனவேதான் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது.

Friday, August 15, 2014

அக்பர் (1542 –1605)

இந்தியாவில் ஆட்சி செய்த மன்னர்களுள் அக்பரும் தலை சிறந்த மன்னனாகக் கொள்ளப்படுகிறார். மொகாலய பேரரசினை நிறுவுவதில் அக்பரின் பங்களிப்பானது அளப்பரியதாகும். தமது பெருமுயற்சியால் ஒரு பேரரசினை நிறுவி, அதனை ஐம்பது ஆண்டுகள் சிறப்பான முறையில் ஆட்சி செய்தார். இவரது நிருவாகம், அரசியல் நடவடிக்கைகள், சமயக் கொள்கை, வெளிநாட்டுக் கொள்கை, சமூக மற்றும் பொருளாதார ரீதியான பங்களிப்பு, கலைத்துறைசார் பங்களிப்பு என இவரது ஆட்சி பல முக்கியத்துவ அம்சங்களை உள்ளடக்கியது.

அக்பர் சிந்து மாவட்ட அமரர் கோட்டம் என்ற இடத்தில் உமாயூன், ஹமீதா பானு பேகம் தம்பதியினருக்கு கி.பி1542 ஆம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ஆம் திகதி மகனாகப் பிறந்தார். பிறந்ததும் அக்பருக்கு பெற்றோர் இட்ட பெயர் பாருக்தீன் என்பதாகும். பின்னர் அவரை ஜலாலுதீன் முகம்மது அக்பர் என அழைத்தனர். அக்பர் பிறந்த சமகாலத்தில் தந்தை உமாயூன் தன் நாட்டினை இழந்திருந்தார். தனது குடும்பத்தை காந்தஹாரில் இருக்கும்படி பணித்துவிட்டு உமாயூன் பாரசீகம் சென்றார். பாரசீக மன்னரின் உதவியுடன் தன் இளவல் அஸ்காரியை வென்று காந்தஹாரினைக் கைப்பற்றிக் கொண்டார். 1545 முதல் அக்பர் தனது தந்தையின் பராமரிப்பில் வளர்ந்தார். அக்பர் படிப்பில் நாட்டம் கொள்ளவில்லை. அதேவேளை வேட்டையாடல், போர்ப்பயிற்சி செய்தலில் ஆர்வம் காட்டினார். 

உமாயூனின் சகோதரன் ஹிண்டால் மடிந்தபோது அக்பர் (9ஆவது வயதில்) கஜினியின் ஆளுநராக நியமனம் பெற்றதுடன் ஹிண்டாலின் மகளையும் திருமணம் செய்தார். உமாயூன் டெல்லியின் அரசனானதும் (கி.பி1555) அக்பர் லாகூரின் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இளம் வயதான அக்பரின் பாதுகாவலனாக பைராம்கான் அமர்த்தப்பட்டான். உமாயூன் 1556 ஆம் ஆண்டு இறந்தபோது ஆட்சிப் பொறுப்புக்கள் அக்பரிடம் வந்து சேர்ந்தது. 1556 ஆம் ஆண்டு மாசி மாதம் 14ஆம் திகதி அக்பர் டெல்லியின் அரசனாக முடிசூடிக்கொண்டார். 

அக்பர் ஆட்சிப்பீடம் ஏறியபோது பல சவால்களை எதிர்கொள்ள நேரிட்டது. உமாயூன் இறந்தபோது டெல்லி, ஆக்ரா பகுதிகளை ஹேமு (அடில்ஷாவின் தளகர்த்தா) என்பான் கைப்பற்றிக் கொண்டான். பஞ்சாப் தனக்கு சொந்தமென சிகந்தர் ஷா என்பான் உரிமை பாராட்டினான். மிர்ஸா ஹகீம் என்பான் (அக்பரின் உறவினன்) காபுலில் தனியரசர் போல் ஆட்சியை முன்னெடுத்தான். முகம்மது அடில் ஷா, இப்ராஹிம் ஷா என்போர் அக்பரது ஆட்சியை கவிழ்க்க திட்டமிட்டனர். பிற மாநிலங்களை ஆட்சி செய்தவர்களும் அக்பருக்கு கட்டுப்படாது செயற்படத் தொடங்கினர். இரண்டு ஆண்டுகள் இடைவிடாத போரினால் நாட்டிலும் பஞ்சம் மலிந்தது. இவை பதின்மூன்று வயது மட்டுமே நிரம்பிய அக்பருக்கு பெரும் சவாலாக காணப்பட்டன. இருப்பினும் பாதுகாவலர் பைராம்கானின் துணையுடன் நாட்டின் ஆட்சியை சிறப்புற நடத்த முயன்றார்.

அக்பரது சிறப்பினை அறிந்து கொள்ள அவரது ஆட்சிமுறை பற்றி நோக்குவது சாலச்சிறந்தது. அவரது ஆட்சி அரேபிய, பாரசீக ஆட்சிமுறைகளைப் பின்பற்றியதாய் அமைந்திருந்தது. துறைகளின் அமைப்பு, மத்திய மற்றும் மாநில ஆட்சியாளர்களின் அதிகார வரம்புகள் முதலானவை அயல்நாட்டு தொடர்பினால் ஏற்பட்டவையாகும். அரசாங்க அலுவல்கள் பற்றிய முடக்கல் போக்கு வரவுகள் அதிகமிருந்தமையால் இதனை 'எழுது தாளினாலான ஆட்சி' என்றும் கூறுகின்றனர்.

அக்பர் நிருவாகத் தலைவராக காணப்பட்டர். சகல துறைகளும் இவருக்குக் கட்டுப்பட்டு செயற்பட்டன. தனக்கு நிருவாக விடையங்களில் உதவிபுரிய அமைச்சரவை ஒன்றினைக் கொண்டிருந்தார். அமைச்சரவையில் முதலமைச்சர், நிதியமைச்சர், இராணுவ அதிகாரி, சமயத்துறை அமைச்சர், தலைமை நீதிபதி, முதலானோர் இடம்பெறுவர். அவர்களின் நியமனம், ஊதியம், பதவி உயர்வு, பதவி நீக்கம் தொடர்பான அதிகாரங்கள் யாவும் மன்னரிடமே காணப்பட்டது. அக்பரிற்கு ஆலோசனைகள் கூற மஜ்லிஸ் என்ற சபை காணப்பட்டது. ஆட்சிமுறைச் செய்திகள், இராணுவ அலுவல்கள், பொதுச்செய்திகள் தொடர்பான ஆலோசனைகளையும் முடிவுகளையும் கூற மொத்தம் இருபது உறுப்பினர் கொண்ட மூன்று குழுக்களாக பிரிக்கப்பட்டு மஜ்லிஸ் சபை செயற்பட்டது.

மாநில நிருவாக அமைப்பினை நோக்குவோமாயின் அரசானது பதினைந்து மாநிலங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. இவை 'சுபாக்கள்' என்று அழைக்கப்பட்டன. சுபாவின் அதிகார் 'சுபேதார்' என அழைக்கப்பட்டார். இவரின் கீழ் திவான், சதர், அமில், பிடிக்சி, போஸ்தார் முதலிய அதிகாரிகள் பணியாற்றினர். ஒவ்வொரு மாநிலமும் பல மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தன. இதில் பௌஜ்தார், அமால் குஸார், பிடிக்ச்சி, வட்ட அதிகாரிகள் முதலானோர் காணப்பட்டனர். இதை விடுத்து கருவூலக் காப்பாளரும் காணப்பட்டார். இவருக்கு பொருளாளர் என்ற பிறிதொரு பெயரும் உண்டு.

நகராட்சி முறையினை நோக்குமிடத்து அதில் 'கொத்வால்' என்ற அதிகாரி முக்கியத்துவப்படுத்தப்படுகிறார். கொத்வால் மத்திய அரசால் நியமிக்கப்படுவார். இவர் சிறு நகராட்சிகளைக் கவனிக்க மாவட்ட வருவாய் அதிகாரிகளை நியமிப்பார். நகரங்கள் ஒவ்வொன்றும் பல வட்டங்களாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வட்டமும் பல பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு அதற்கு பொறுப்பாக அதிகாரிகளை கொத்வால் நியமிப்பார். நகரினை கண்காணித்தல், விலை நிர்ணயத்தை பேணல், குற்றச் செயல்களைத் தடுத்தல், இறைச்சிக் கடைகளைக் கட்டுப்படுத்தல் என பல கடமைகளில் கொத்வால் கவனம் செலுத்த வேண்டும்.

தன்னாட்சி ஊர் பொதுநல மன்றங்களின் சிறப்பான செயற்பாடானது அக்பரது ஆட்சியிலேயே வெளிப்படுத்தப்பட்டது. ஏனெனில் சுல்தானியராட்சியில் இம்முறை காணப்பட்டிருந்தாலும் இம்மன்றங்களிலிருந்து வருமானம் கிடைக்காமையால் சுல்தானியர்கள் அதனை தனித்தியங்க விட்டனர். ஆனால் அக்பர் ஊர் ஐவராயங்களை சட்டப்படி அனுமதித்தார். அக்பரது தலையீட்டால் ஊராட்சி மன்றங்கள் தகுதி, மதிப்பு பெற்றன. ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு பொது நலமன்றம் ஒன்று காணப்பட்டது. அம்மன்ற நிருவாகக் குழுவில் ஒவ்வொரு வீட்டுத் தலைவரும் காணப்பட்டனர். ஊர் பொது நிருவாகம், பாதுகாப்பு, துப்பரவு, நீதி, நீர்ப்பாசனம், மருத்துவம் என பல தரப்பட்ட பணிகளை இம்மன்றங்கள் புரிந்தன.

முப்பதாண்டு யுத்தம்(1618-1648)

ஐரோப்பிய வரலாற்றிலே பல புரட்சிகள், போர்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக சமய அடிப்படையில் சிலுவைப்போர், நெதர்லாந்துப்புரட்சி அதே போல் முப்பதாண்டு யுத்தம் போன்றவற்றைக் குறிப்பிடலாம். இதில் முப்பதாண்டு யுத்தமானது தனிச்சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. இப்போரானது சமயப் போரின் இறுதிப் போராகவும், அரசியல் போரின் ஆரம்பப் போராகவும் காணப்படுகிறது. இது கத்தோலிக்கத்தவருக்கும், புரட்டஸ்தாந்தினருக்கும் இடையிலான போராக கொள்ளப்படுகிறது.

சமயப் போராக உருவெடுத்து அரசியல் போராக மாற்றமடைந்த இந்த யுத்தமானது கி.பி1618- கி.பி1648 வரையான முப்பது ஆண்டுகள் நடைபெற்ற காரணத்தினால் முப்பதாண்டு யுத்தம் எனக் கொள்ளப்படுகிறது. கத்தோலிக்க மற்றும் புரட்டஸ்தாந்து சமயச் சார்பில் கூலிப் படையினரே இரு புறமும் பங்குபற்றினர். போரில் ஈடுபட்டவரை விட சாதாரண மக்களே அதிகம் பாதிக்கப்பட்டனர். பேரரசிற்கும் ஜேர்மனிக்குமிடையிலான போராக இது காணப்படுகிறது.

முப்பதாண்டு யுத்தமானது உரோமப் பேரரசின் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ஏற்பட்டிருப்பினும் பின்னர் படிப்படியாக ஐரோப்பிய நாடுகள் பலவற்றிற்கும் பரவிக்கொள்கிறது. போரின் போது கத்தோலிக்க சமயச் சார்பாக ஸ்பெயினும் ஆஸ்திரியாவும் பங்கு கொண்டன. கி.பி 1635 இல் ஆதிக்கப் போராக மாறி பின்னர் அரசியல் போராக மாறிக்கொள்கிறது. இறுதியில் ஹப்ஸ்பேர்க் குடும்பத்திற்கும், பூபன் குடும்பத்திற்குமிடையிலான போராக மாறியதென்பது குறிப்பிடத்தக்கது.

போர் ஒன்று ஏற்படுவதற்கு முக்கிய காரணிகளும், துணைக் காரணிகளும், உடனடிக் காரணிகளும் பங்கு வகிப்பதனை பல போர்களின் வாயிலாக நாம் அறிந்ததே. இந்த போரிலும் பல காரணிகள் ஏதுவாய் அமைந்தன. அதனை நாம் நோக்குவது சாலச் சிறந்தது. இப்போர் ஏற்பட கத்தோலிக்க சமயத்தவரும், பேரரசும் சேர்ந்து புரட்டஸ்தாந்து சமய மக்களை கொடுமைப்படுத்தியமையே காரணம் எனலாம். அத்துடன் மேலும் பல காரணிகளும் முப்பதாண்டு யுத்தத்திற்கு வழிகோலின.

புனித ரோமானியப் பேரரசர் ஐந்தாம் சார்ள்ஸின் ஆட்சிக் காலப் பகுதியில் ஜேர்மனிய சிற்றரசுகள் தம் பகுதியினருக்கு சமயச் சுதந்திரம் வேண்டும் எனக் கோரி கிளர்ச்சி செய்த போது கிளர்ச்சியை தவிர்க்க ஐந்தாம் சார்ள்ஸ் கி.பி 1555இல் சமாதான உடன்படிக்கையினை செய்தான். இதனால் ஜேர்மனியின் 300 இற்கு மேற்பட்ட சிற்றரசுகளுக்கு சமய விடயங்களில் சுதந்திரம் வழங்கப்பட்டது. ஆனால் கல்வினிய சமயத்தவர்க்கு சலுகைகள் எதனையும் வழங்கவில்லை. இதற்குக் காரணம் இவ்வுடன்படிக்கை ஏற்பட்ட காலத்தில் கல்வினிச சமயமானது பரவியிருக்கவில்லை. அத்துடன் கல்வினிச சமயத்திற்கு மாறியவர்கள் சட்டத்தின் பாதுகாவலை பெறத்தவறியதுடன், கத்தோலிக்க சமயத்தவருடன் பகைமையையும் கொண்டனர். இவ்வாறு ஏற்பட்டுக்கொண்ட சமயப் போட்டிகள் பிற்காலத்தில் போர் ஒன்று ஏற்பட வழிவகுத்தது.

கத்தோலிக்கர்கள் தங்களின் வழியில் புரட்டஸ்தாந்தினரை ஈடுபடுத்த முற்பட்ட போதும் அவர்கள் இதற்கு இசைந்து கொடுக்காமல் கி.பி 1552இல் கொண்டுவந்த நுஉஉடநளயைளவiஉயட சுநளநசஎயவழைn விதியின் முறைப்படி கத்தோலிக்கரின் சொத்துகளைப் பறிமுதல் செய்யக் கூடாது என்று கூறப்பட்டதை மீறி புரட்டஸ்தாந்தர்கள் கத்தோலிக்கரின் குருமடங்கள், சமயத்தலைவர்களின் அலுவலகங்கள், கட்டிடங்கள் முதலானவற்றை தமது உலகியல் தேவைகளுக்கு பயன்படுத்தத் தொடங்கினர். பெரிய நிலப்பரப்பு, கட்டிடங்கள் நடைமுறையில் புரட்டஸ்தாந்தினரின் உடமைகள் ஆகின. இந்த நடவடிக்கையானது சட்டத்திற்கெதிரானதென கத்தோலிக்கள் கூறியமை போட்டியை அதிகரித்தது.

ஐந்தாம் சார்ள்ஸின் பின்னர் வந்த முதலாம் பேடினண்ட், இரண்டாம் மக்ஸிமில்லியன் என்போர் மிதவாதிகளாக காணப்பட்டனர். இவர்கள் ஓரளவு சமயப் பொறையைக் கடைப்பிடித்தனர். இதனால் புரட்டஸ்தாந்து சமயமானது வெகு விரைவாக மக்களிடையே பெரு வளர்ச்சி பெற்று கத்தோலிக்க சமயத்திற்கு அச்சுறுத்தல் விடுத்தது. மேலும் இவர்களின் காலப்படுதியில் போர்கள் தவிர்க்கப்பட்டமையால் புரட்டஸ்தாந்தர்கள் தீவிரமாக செயற்பட இடமளிக்கப்பட்டது. குறிப்பாக பதினாறாம் நூற்றாண்டின் இறுதிக் காலத்திலும், பதினேழாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்திலுமே கல்வினிசம் துரிதமாக வளர்ச்சி பெற்றது. இதனைத் தமக்கு பாதகமாக கருதிய கத்தோலிக்க மக்கள் புரட்டஸ்தாந்து மக்களுடன் முரண்படத் தொடங்கினர். 
ஜேர்மனியில் ஏற்பட்டுக் கொண்ட எதிர் சீர்திருத்த இயக்கமானது படிப்படையாக வலுவடைந்தது. இரண்டாம் ருடொல்ப்பின் காலம் வரை(1576-1612) இவ்வியக்கம் ஜேர்மனியில் தழைக்க சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. பவேரியா, வியன்னா ஆகிய நாடுகளின் பேரவைகளில் மேலாட்சி  உரிமை பெற்று ஆளும் இனத்தவர்கள் ஹப்ஸ்பேர்க் இனத்தவரை விட கத்தோலிக்க சமயத்தில் அதிக ஆர்வமும், அக்கறையும் கொண்டிருந்தனர். இவர்களுடன் கத்தோலிக்க தொண்டர்களின் செயற்பாடுகளும் போரிற்கு காரணமாகியது. யேசு சபையின் செயற்பாடுகள், டிரண்ட் சபையின் செயற்பாடுகள் என்பனவற்றால் ஜேர்மனியில் உள்ள பல கத்தோலிக்க நாடுகளில் உற்சாகம், புத்துணர்வு, சமயப் பற்று என்பன ஏற்பட காரணமாகின. ஜெஸ்யூட் குருமார்கள் பாடசாலைகளையும், வைத்திய சாலைகளையும் நிறுவி சேவை செய்தனர். மேலும் பவேரிய மன்னன் மக்ஸிமில்லியனின் உதவியுடன் கத்தோலிக்க சமயமானது அவரது நாட்டில் வளர்ச்சி பெற்றது. இவனால் கத்தோலிக்க சமயத்தினைச் சேராதவர்கள் நாட்டினை விட்டு வெளியேற்றப்பட்டனர். இதனால் வெறுப்புற்ற புரட்டஸ்தாந்தினர் போரிற்குத் தயாராகினர்.

டன்யூப் பகுதியில் உரோமப் பேரரசைச் சேர்ந்த ஒரு சுதந்திர நாடாக டொனோளவேர்த் காணப்பட்டது. அது ஜேர்மனிய சட்ட சபையில் அங்கத்துவமும் வகித்தது. இந்த சுதந்திர நாட்டில் கத்தோலிக்க சமயத்துடன் புரட்டஸ்தாந்து சமயமும் காணப்பட்டது. கத்தோலிக்க சமயக் கொள்கை விடாப்பிடியர்கள் கி.பி1606 இல் கத்தோலிக்க சமய ஊர்வலம் ஒன்றை இந்த நாட்டில் நடத்தினர். ஈற்றில் ஆர்ப்பாட்டமானது கலவரமாக முடிந்தது. அதாவது இவ்வூர்வலத்தை புரட்டஸ்தாந்தினர் கலைத்தனர். இதனால் சமயங்களிடையிலான முறுகல் நிலை வீரியமடைந்தது. கோபமடைந்த கத்தோலிக்க மக்கள் மன்னன் ருடால்பிடம் முறையிட்டனர். ருடால்ப் அந்த நகரினை பேரரசினுள் உட்படுத்தினர். இதனை சாதகமாகக் கொண்டு பவேரிய மன்னன் மக்ஸிமில்லியன் அதனை வலுக்கட்டாயமாக கத்தோலிக்க நாடாக மாற்றினான். இச் செயலானது புரட்டஸ்தாந்து மக்களிடையில் வெறுப்பை அதிகரித்தது.

கி.பி1608 இல் ஒரு புரட்டஸ்தாந்து சங்கமொன்றினை புரட்டஸ்தாந்தினர் ஏற்படித்தினர். டொனள்வேர்த்தில் ஏற்பட்ட அவமானம் மீண்டும் ஏற்படக் கூடாது என்பதே இதற்கான காரணமாகும். இவ்வமைப்பு 'இவான் ஜெலிக்கல் யூனியன்' (கிறிஸ்தவ செய்தி பரப்பும் சங்கம்) என அழைக்கப்பட்டது. இதில் கல்வீனிய சமயத்தினைத் தழுவிய பல இராச்சியங்கள் இணைந்தமை குறிப்பிடத்தக்கது. இதைக் கண்ட கத்தோலிக்கர்கள் தாங்களும் சங்கமொன்றினை அமைக்க தீர்மானித்தனர். கி.பி 1609இல் மக்ஸிமில்லியன் தலைமையில் 'கத்தோலிக்க கூட்டுறவு' என்ற சங்கத்தை நிறுவினர். இதன் நடவடிக்கைகள் புரட்டஸ்தாந்து சமயத்தை நசுக்கும் வகையில் அமைந்தன. இச்செயற்பாடு சமயங்களிடையில் வேற்றுமையினை மேலும் அதிகரித்தது. 
அரசியல் காரணங்களும் போர் ஏற்படக் காரணமாகின. ஐரோப்பிய போரரசனாக காணப்பட்ட இரண்டாம் ருடால்ப் மனநிலை பாதிக்கப்பட்டிருந்தமையால் அவனின் சகோதரன் அரசாட்சி செய்தான். இந்த செயற்பாடானது அரசியலில் ஸ்திரமற்ற தன்மையினை தோற்றுவித்தது. மேலும் இக்காலப் பகுதியில் ஐரோப்பாவில் ஆட்சி செய்த முதலாம் பேடினண்ட், மத்தியஸ், இரண்டாம் மக்ஸிமில்லியன் , ருடால்ப் போன்றோர் திறமையற்ற அரசர்களாக விளங்கியமை யுத்தத்திற்கான வாய்ப்பினை ஏற்படுத்தியது. இவர்களது செயற்பாட்டால் அரசியல், சமூக, பொருளாதார விடயங்களில் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டன. இதன் விளைவாக உள்நாட்டில் போர், அயல் நாட்டுத் தலையீடுகள், ஆதிக்கங்கள் முதலியன ஏற்படக் காரணமாகின.

அனுராதபுர ஆட்சியாளர்களும் அவர்கள் நீர்ப்பாசனத்திற்கு செய்த பங்களிப்புக்களும்


இலங்கை வரலாறு தலைநகரங்களை அடிப்படையாக கொண்டதாக காணப்படுவது சிறப்பாகும். இவ்வாறான அரசியல் வரலாற்றில் அனுராதபுரத்திற்கு தனிச் சிறப்பிடம் வழங்கப்படுகிறது. இலங்கையில் ஏற்படுத்தப்பட்ட முதலாவது இராசதானியாக அனுராதபுர இராசதானி காணப்படுகிறது. இதன் முக்கிய சிறப்பாக கூறப்படுவது நீர்ப்பாசன தொழினுட்பவியல் வளர்ச்சி மிக உன்னத நிலையினை அடைந்தமையாகும். இவ்வளர்ச்சிக்கு மிக முக்கிய பங்காற்றியவர்களாக சமகால மன்னர்களைக் கூறலாம். 

அனுராதபுரத்தினை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த மன்னர்கள் பற்றி நோக்குமிடத்து, அனுராதபுர இராசதானியானது மிக நீண்ட காலம் நிலைபெற்றிருந்தமையினால் ஏராளமான மன்னர்கள் அதனை ஆட்சி செய்தனர் என்பது நோக்கத்தக்கது. அவர்களை பற்றி அறிந்துகொள்ள எமக்கு உதவும் மிக முக்கிய வரலாற்று நூலாய் அமைவது மகாவம்சமாகும். இந்நூலின் அடிப்படையிலேயே அனுராதபுர இராசதானியின் மன்னர்களினை வரிசைப்படுத்தி நோக்கமுடியும் என்பது இந்நூலின் சிறப்பாகும். 

எமக்கு கிடைக்கின்ற மூலாதார சான்றுகளின் அடிப்படையில் நோக்குவோமாயின் அரசனே நிருவாக அதிபதியாக விளங்கினான் என்பது கண்கூடு. அரச உரிமைகள் பரம்பரை பரம்பரையாக பின்பற்றப்பட்டு வந்த மரபுகளின் அடிப்படையில் பின்பற்றப்பட்டது. அரசியல் ஸ்தாபனங்கள், அவற்றின் ஆரம்பத்தினை பார்ப்பின் அவை ஆரியரின் வருகையுடன் ஆரம்பித்ததாக கூறப்படுகிறது. ஆதியில் இங்கு குடியேறிய ஆரியரது நேரடி சந்ததி என்று கூறிக்கொண்டோரே வரலாற்றின் ஆரம்பத்தில் அனுராதபுரத்தில் ஏகத்தலைவர்களாக விளங்கினர். அனுராதபுர இராசதானியின் முதல் மன்னனாக பண்டுகாபயன் கொள்ளப்படுகிறான். பண்டுகாபய மன்னனால் தலைநகராக தெரிந்தெடுக்கப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட அனுராதபுரம் இலங்கையின் கோனாட்சியின் முதல் உத்தியோகபூர்வ தலைநகரம் என்று புகழப்படுவது இங்கு நோக்கத்தக்கது.

அனுராதபுரத்தினை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த மன்னர்களினை பட்டியல்படுத்தி நோக்குவது இலங்கை வரலாற்றின் தொடர் தன்மையினை அறிய அவசியமாகின்றது. அந்த வகையில் முதல் மன்னனாக நோக்கப்படுபவன் பண்டுகாபயனாவான். இவன் கி.மு 437இல் முதல் உத்தியோகபூர்வ தலைநகரமாக அனுராதபுரத்தினை தெரிவுசெய்து ஆட்சி செய்தான். இவனிற்குப் பின் அவனது மகனான மூத்தசிவன் கி.மு 367இலும், அவனது மகனான தேவநம்பிய தீசன் கி.மு 307 இலும், உத்தியன், மகாசிவன் சூரதீசன் ஆகியோர் முறையே கி.மு 267, கி.மு 257, கி.மு 247 ஆகிய ஆண்டுகளிலும் அதனைத் தொடர்ந்து அந்நிய நாட்டவர்களான குதிரை வியாபாரிகளாக வந்து ஆட்சியினைக் கைப்பற்றிய சேனனும் குத்திகனும் கி.மு 237இல் ஆட்சியக் கைப்பற்றினர் என்பது கூறத்தக்கது.

சேனனும் குத்திகன் என்ற அந்நிய நாட்டவர்களிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி அசேல மன்னன் கி.மு 215 இல் ஆட்சியினைக் கைப்பற்றியாண்டான். அசேலனைக் கொன்று சோழ மன்னனான எல்லாளன் கி.மு 205இல் ஆட்சியினைக் கைப்பற்றி 44 ஆண்டுகள் இலங்கையினை ஆட்சி செய்தான். எல்லாளனைக் கொன்று துட்டகாமினி கி.மு161 இல் ஆட்சியினை முன்னெடுத்தான். இவனின் பின்னர் சத்தாதீசன், தூலத்தனன், இலஞ்சதீசன், காலாட்நாகன் ஆகிய மன்னர்களும் அதன் பின்னர் வட்டகாமினி அல்லது வலகம்பாவும் (கி.மு104) இவனிற்கு பின்னர் ஐந்து தமிழ் அரசர்களும் (கி.மு103- கி.மு088) பின்னர் தமிழ் அரசனிடமிருந்து மீண்டும் ஆட்சியினை வட்டகாமினி கைப்பற்றி கி.மு88 முதல் ஆட்சியினைத் தொடர்ந்தான். அதன் பின்னர் மகாசூளி மகாதீசன்(கி.மு76), சேரநாகன் (கி.மு62), தீசன்(கி.மு50), சிவன், வடுகன், தாருபாதிகதீசன்(கி.மு47), நிலியன், அனுலா, குடகன்னதீசன்(கி.மு42), பாதிகாபயன்(கி.மு20), மகாத்திக மகாநாகன்(கி.மு9), ஆமந்த காமினி(கி.மு21), கனிரசானுதீசன், சூலாபாயன், சீவலி முதலியோர் ஆட்சி செலுத்தினர்.

கி.மு 35 இன் பின்னரான மூன்று ஆண்டுகள் ஆட்சிசெய்த அரசர்கள் பற்றிய தகவல் எதுவும் கிடைக்கப்பெறவில்லை. கி.மு38 இல் இளநாகனும், பின்னர் சந்தமுகசிவன், யசலாலகதீசன், சுப்பாராசன் என்போர் ஆட்சி செய்தனர். வசபன் கி.மு 66ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்தான். வங்கனாசிகதீசன்(கி.பி 110), 1ஆம் கஜபாகு(கி.பி 113), மகல்லநாகன்(கி.பி 135), பாதிகதீசன்(கி.பி 141), கனிட்டதீசன், குச்சநாகன், குஞ்சநாகன், 1ஆம் சிறீநாகன், வோகரிக்கதீசன், அபயநாகன், 2ஆம் சிறிநாகன், விஜயகுமாரன், சங்கதீசன், சங்கபோதி(சிறிசங்கபோ), கோதகாபயன், 1ஆம் சேட்டதீசன் ஆகியோர் கி.பி 165- கி.பி 277வரையும், மகாசேனன்(கி.பி 277), சிறீ மேகவண்ணன், 2ஆம் சேட்டதீசன், புத்ததாசன், உபதீசன், மகாநாமன், சோதிசேனன், சத்தகாகன், மித்தசேனன் ஆகிய மன்னர்கள் கி.பி 301- கி.பி 435 வரையும்,அதன் பின்னர் ஆறு தமிழர்கள் ஆட்சிசெய்தனர்.

கி.பி463 ஆம் ஆண்டு தமிழ் அரசனிடமிருந்து ஆட்சியினைக் கைப்பற்றி தாதுசேன்னன் ஆட்சிபுரிந்தான். அவனிற்கு பின்னர் மகனான காசியப்பன்(கி.பி 479-527 வரை கிகிரியாவை ஆட்சி செய்தான். பின்னர் 1ஆம் மொகலான(கி.பி 497), குமார தாதுசேனன், கீர்த்திசேனன், சிவன், உபதீசன், அம்பசாமநேர சிலாகால, தாதாப்பபூதி, 2ஆம் மொகலானா, கீர்த்தி ஸ்ரீமேகவண்ணன், மகாநாகன் ஆகியோர் கி.பி 515- கி.பி 561வரைக்கும் ஆட்சி செய்தனர். பின்னர் 1ஆம் அக்கபோதி(கி.பி 564), 2ஆம் அக்கபோதி (கி.பி598), சங்கதீசன், தல்லமொகலானா, சிலாமேகவண்ணன், 3ஆம் அக்கபோதி, 3ஆம் சேட்டதீசன், 3ஆம் அக்கபோதி(மீண்டும் ஆட்சி), தாதோபதீசன், 2ஆம் காசபன், 1ஆம் த்ப்புலன், 2ஆம் தாதோபதீசன், 4ஆம் அக்கபோதி, தத்தன், உண்ணனாகர அத்ததாத, மானவரம்மன், 5ஆம் அக்கபோதி, 3ஆம் காசபன், 1ஆம் மகிந்தன், 6ஆம் அக்கபோதி, 7ஆம் அக்கபோதி, 3ஆம் காசியப்பன், 2ஆம் மகிந்தன், 2ஆம் தப்புலன், 3ஆம் மகிந்தன், 8ஆம் அக்கபோதி, 3ஆம் தப்புலன், 9ஆம் அக்கபோதி, 1ஆம் சேனன், 2ஆம் சேனன், 1ஆம் உதயன், 4ஆம் காசியப்பன், 5ஆம் காசியப்பன், 4ஆம் த்ப்புலன், 2ஆம் உதயன், 3ஆம் சேனன், 3ஆம் உதயன், 4ஆம் சேனன், 4ஆம் மகிந்தன், 5ஆம் சேனன் ஆகியோர் கி.பி 608- கி.பி 1001 வரைக்கும் ஆட்சி செய்தனர் பின்னர் ஆட்சிப்பீடம் ஏறிய 5ஆம் மகிந்தன்  அனுராதபுர இராசதானியின் இறுதி மன்னனாவான். பின்னர் ராஜராஜ சோழனது ஆதிக்கம் இலங்கையில் ஏற்பட்டமையினைத் தொடர்ந்து இராசதானி பொலனறுவைக்கு இடம் மாற்றப்பட்டது.

Tuesday, March 4, 2014

சிந்துவெளி நாகரிகம்


சிந்து சமவெளி கால நகரங்கள் அற்புதமாகத் திட்டமிடப்பட்டு அமைக்கப்பட்டிருந்தன.  ஒவ்வொரு நகரத்திலும் இரண்டு பகுதிகள்: ஒரு பகுதி தரை மட்டத்தில், இன்னொரு பகுதி செயற்கையாக உருவாக்கப்பட்ட குன்றின்மேல். இரு பகுதிகளையும் கோட்டைகள் பிரித்தன. உயரத்தில் இருந்த பகுதி அக்ரோப்போலிஸ் என்று அழைக்கப்பட்டது.  இங்கே, பொதுமக்கள் கூடும் அரங்கங்கள், கோயில்கள் , நெற்களஞ்சியங்கள் இருக்கும். மொஹெஞ்சதாரோ நகரத்தில் பொதுக் குளியலறை இருந்தது.

தரைமட்டப் பகுதிதான் மக்கள் வசிக்கும் இடம். இங்கே சாலைகள் 30 மீட்டர் அடி அகலம் கொண்டவை. எல்லாச் சாலைகளும் செங்குத்தாகச் சந்தித்தன. இதனால், சாலைகளுக்கு நடுவே இருந்த பகுதிகள் செவ்வக வடிவம் கொண்டவை.  இந்தப் பகுதிகளில் வீடுகள் கட்டப்பட்டன.  கட்டுமானத்துக்கு உலையில் சுடப்பட்ட செங்கற்களைப் பயன்படுத்தினார்கள். இவை 1:2:4 என்னும் விகிதத்தில் உயரம், அகலம், நீளம் என சமச் சீரானவை. ஒரு சில வீடுகள் மிகப் பெரியவை. மாடி வீடுகளும் இருந்தன. பெரிய வீடுகளில் விசாலமான முற்றம் இருந்தது.

பண்டைய நாகரிகங்களில் சிந்து சமவெளியில்தான் மிகச் சிறந்த சுகாதார வசதிகள் இருந்தன. எல்லா வீடுகளிலும், குடிநீர் வசதிகளும், குளியல் அறைகளும், கழிப்பறைகளும் இருந்தன.  ஆச்சரியமான விஷயம் என்ன தெரியுமா? நகரங்களில் கழிவுநீர் வடிகால் அமைப்பு இருந்தது. எல்லா வீதிகளிலும் மூடிய சாக்கடைகள் இருந்தன. வீடுகளின் அசுத்த நீர் இவற்றில் சென்று சேரக் குழாய்கள் பொருத்தப்பட்டிருந்தன.  5000 வருடங்களுக்கு முன்னால், இத்தனை கச்சிதமாகத் திட்டமிடப்பட்ட நகரங்களும், வீடுகளுமா?
நெற்களஞ்சியங்கள் பிரம்மாண்டமானவை – 150 அடி நீளம், 75 அடி அகலம், 15 அடி உயரம். அதாவது, 1,68.750 அடி கொள்ளளவு. இவற்றுள் 3 வரிசைகள், 27 சேமிப்புக் கிடங்குகள்! இந்து சமவெளியின் விவசாயச் செழிப்புக்கு வேறென்ன ஆதாரம் வேண்டும்.

இன்னொரு முக்கிய அம்சம், பொதுக் குளிப்பிடங்கள். வட்டச் சுவர்கொண்ட உயரமான கிணறுகள், படிக்கட்டுகளுடன் நீள்சதுரப் பொதுக் குளியல் துறைகள், அதைச்சுற்றிலும் சிறிய குளியல் அறைகள்.  இவற்றுள் பிரம்மாண்டம், மொஹெஞ்சதாரோவில் இருந்த பெரும் குளியலறை (கிரேட் பாத்) 179 அடி நீளமும், 107 அடி அகலமும் கொண்ட பகுதி இது. மையத்தில் 39 அடி நீளம், 23 அடி அகலம், 8 அடி ஆழம் கொண்ட நீச்சல் குளம். அடியில் தண்ணீர் தேங்கி நிற்பதற்காகச் செங்கற்கள் நெருக்கமாகப் பதிக்கப்பட்டிருந்தன. குளத்தின் உள்ளே ஏறி, இறங்க வசதியாக இரண்டு பக்கங்களிலும் படிக்கட்டுகள் இருந்தன.

குளத்தைச் சுற்றி ஆடைகள் மாற்றுவதற்கான அறைகள் இருந்தன. அவற்றில்  கிணறுகள் இருந்தன. கிணறுகளுக்குள் தண்ணீர் இறைத்துக் குளத்துக்குள் பாய்ச்சலாம். குளத்தின் அழுக்கு நீரை வெளியேற்ற வடிகால் குழாய்கள் இருந்தன. நகரங்களில் இருந்த கட்டடங்கள் வியக்க வைப்பவை. சுட்ட செங்கற்களால் அமைக்கப்பட்ட இவற்றில், சிமெண்ட் போன்ற சுண்ணாம்பும், செம்மண்ணும் சேர்ந்த ஒரு கலவையைப் பயன்படுத்தினார்கள். அருகருகே இரண்டு செங்கற்களை வைத்து, அவற்றின் நடுவே இன்னொரு செங்கல்லைப் பொருத்தி, கலவையைப் பூசினார்கள். உறுதியான கட்டடங்களை உருவாக்கும் இந்தப் பொறியியல் அறிவு நம்மை வியக்கவைக்கிறது.
நகரங்களுக்கு வெளியே, விசாலமான கோட்டைகள் இருந்தன. அவற்றுக்குள்ளும் வீடுகள் – சில மிகப் பெரியவை, பல சிறியவை. வெள்ளம், எதிரிகள் தாக்குதல் ஆகியவை நடந்தால், தங்களைப் பாதுகாத்துக்கொள்ள, ஆட்சிபீடத்தில் இருந்தவர்கள் இந்தக் கோட்டைவீடுகளைப் பயன்படுத்தியிருக்கலாம்.

கிரோக்கத்தில் ஒலிம்பிக்



கிரேக்கம் ஒரே நாடாக இருந்தபோதிலும், ஆட்சிமுறை நகர ராஜ்ஜியங்களுக்கிடையே மாறுபட்டது. உதாரணமாக, ஸ்பார்ட்டாவில் மன்னராட்சி: ஏதென்ஸில் கி.மு. 1066 வரை மன்னராட்சி இருந்தது. இதற்குப் பிறகு, மாஜிஸ்ட்ரேட் நகர ராஜ்ஜியத் தலைவரானார், மக்களாட்சி மலர்ந்தது. இந்த முறையில், உயர் குடியினர் மட்டுமே வாக்குரிமை பெற்றவர்கள். இவர்களுள், ஓட்டளிக்க இருபது வயது ஆகவேண்டும். இரண்டு சபைகள் இருந்தன. போலே (Boule) என்பது மேல்சபை. கீழ்ச்சபையின் பெயர் எக்ளீஸியா (Eclesia).

மேல்சபையின் அங்கத்தினர் எண்ணிக்கை 500. கிரேக்கத்தில் பத்து வகை மரபுக் குடியினர் இருந்தார்கள், ஒவ்வொரு மரபிலிருந்தும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் 50 அங்கத்தினர்கள் குலுக்கல் முறையில் போலே அங்கத்தினர்களாத் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களின் பதவிக் காலம் ஒரு வருடம், எக்ளீஷியா விவாதிக்க வேண்டிய முக்கிய பிரச்னைகள் எவை என்று போலே வடிகட்டி முடிவுசெய்யும். இவை மட்டுமே எக்ளீஷியாவின் பரிசீலனைக்கு வரும். மேல்சபை நாட்டு விடுமுறை தவிர்த்த மீதி எல்லா நாள்களிலும் சந்திக்கும்.

எக்ளீஸியாவில்  இரண்டு வருட ராணுவ அனுபவம் பெற்ற வாக்குரிமை பெற்ற அனைவரும் உறுப்பினர் ஆகமுடியும். எக்ளீஸியா நாற்பது நாள்களுக்கு ஒரு முறை கூடும். எல்லோரும் பேசலாம். பிரச்னைகளை விவாதித்தபின் கை தூக்கல் மூலம் வாக்கு எடுக்கப்படும். சில சமயங்களில் ரகசிய வாக்கெடுப்பும் நடப்பதுண்டு.

எக்ளீஷியாவில் 40,000 அங்கத்தினர்கள் இருந்தார்கள். குறைந்தபட்சம் 6000 பேர் வந்தால்தான் கூடம் நடத்தலாம். கூட்டம் குறைவாக இருந்தால், 300 அடிமைகள் கைகளில் சிவப்பு நிறத்தில் முக்கிய நீளக் கயிற்றைச் சுழற்றியபடியே நகரின் வீதிகளை வலம் வருவார்கள். யார் மேலெல்லாம் கயிறு  பட்டதோ, அவர்கள் உடனே கூட்டத்துக்கு வரவேண்டும், அல்லது அபராதம் கட்டவேண்டும்.

எக்ளேஷியாவுக்கு ஏகப்பட்ட அதிகாரங்கள் இருந்தன. அண்டை நாடுகளோடு சண்டை அல்லது சமாதானத்துக்கான முயற்சிகள், வெளிநாட்டுக் கொள்கை, ஏற்றுமதி இறக்குமதி உறவுகள் ஏற்படுத்துதல், நாட்டின் வரவு செலவுக் கணக்கை நிர்வகித்தல், ராணுவ நிர்வாகம், மக்கள் நலத் திட்டங்கள் வகுத்தல், நிறைவேற்றல், மதம் தொடர்பான செயல்கள், குடிமக்களின் உரிமைகளைப் பாதுகாத்தல், சட்டம், ஒழுங்கு நடவடிக்கைகள் போன்றவை எக்ளேஷியாவின் முக்கியப் பொறுப்புகள். எக்ளேஷியா வருடத்துக்கு நாற்பது நாள்கள் கூடும். கூட்டம் திறந்த வெளி மைதானத்தில் நடக்கும்.  அதிகாலையில் பூசையோடு தொடங்கும், அடுத்து மிருக பலி. கூட்டத்தில் வரி பாக்கி வைத்திருப்பவர்கள், ஒழுக்கமற்றவர்கள், குற்றவாளிகள், பெற்றோரைப் புறக்கணித்தவர்கள், யுத்தங்களில் பங்கேற்காமல் நழுவியவர்கள் ஆகியோர் பேச அனுமதிக்கப்படமாட்டார்கள். பிறர் யார் வேண்டுமானாலும் பங்கேற்று தங்கள் கருத்துக்களைச் சொல்லலாம்.

நிர்வாகத்தில் ராணுவம் மிக முக்கியமானது. ஸ்ட்ராட்டகோய் (Strategoi) என்பது ராணுவத் தளபதி பதவி. ஒவ்வொரு மரபுக்கும் ஒருவராகப் பத்துத் தளபதிகள் நியமிக்கப்பட்டார்கள். தேர்தல்மூலம் பதவி பெற்ற இவர்களின் ஆட்சிக் காலம் ஒரு வருடம்.  ராணுவ நிர்வாகம், வீரர்கள் பயிற்சி, தளவாடங்கள் திட்டமிடுதல், வாங்குதல், ராணுவக் கணக்கு வழக்குகள், பிற நகர ராஜ்ஜியங்களுடன் பேச்சு வார்த்தைகள் நடத்துதல் போன்றவை ஸ்டாரட்டகோய்களின் கடமைகள்.

Friday, January 3, 2014

மராட்டியரின் எழுச்சியும் சிவாஜியின் முக்கியத்துவமும்


இந்திய வரலாற்றில் மராட்டியரின் எழுச்சி மிக முக்கிய வரலாற்று நிகழ்ச்சி ஆகும். 17ஆம் நூற்றாண்டில் மராட்டியர் எழுச்சி இடம்பெற்றுக் கொண்டது. மன்னன் ஷாஜி பான்ஸ்லே, சிவாஜி என்போர் மராட்டியர் எழுச்சிக்கு காரணமாயினர். சமகாலத்தில் மொகாலய மன்னர்களினால் வட இந்தியாவில் ஆட்சிமுறை முன்னெடுக்கப்பட்டது. மொகாலய மன்னர்களின் தக்கணம் மீதான தாக்குதல் 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் இடம்பெற்றது. இந்த தாக்குதல்களினைத் தடுக்கும் விதமாக இந்து அரசு ஒன்றினை நிறுவும் தேவை நிமிர்த்தம் பெரு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த முயற்சிக்கான அடித்தளத்தினை மராட்டிய மன்னனான ஷாஜி பான்ஸ்லே இட்டார். அதன் தொடர்ச்சியாக அவரது மகன் சிவாஜி என்பார் மராட்டியரது ஆதிக்கத்தினை வட இந்தியாவில் ஏற்படுத்தலானார்.

மராட்டியர் எழுச்சிக்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. மராட்டிய மன்னனான சத்ரபதி சிவாஜியும் அவரின் தந்தை ஷாஜி பான்ஸ்லேயும் மராட்டியர் எழுச்சிக்கு மிக முக்கிய காரணமாய் அமைகின்றனர். மேலும் பல அடிப்படைக் காரணங்களும் கூறப்படுகின்றன. இந்தியாவின் புவியியல் அமைப்பானது மராட்டிய மக்களின் தன்மையையும், மன எழுச்சியையும் உருவாக்கவும், ஊக்குவிக்கவும் துணை புரிந்தது. மேற்கு தொடர்ச்சி மலைகள் மற்றும் நருமதை ஆற்றிலிருந்து தக்கண பீட பூமியின் தென்மேற்குப்பகுதி வரை காணப்பட்ட அடர்ந்த காடுகள் கொரில்லா போர் முறையைக் கையாள வழிசமைத்தது.

மராட்டிய நாடு வளம் மிக்கதாகவும் வன்மை மிகக் குன்றாமலும் வளப்பம் மிக்குத் தோன்றாமலும் இடைப்பட்ட நிலையில் இருந்தமையால் அந்நாட்டு மக்கள் பெருமுயற்சி உடையவர்களாக இருந்தனர். கருநாடக சமவெளி, சையாதரி மலைப்பகுதிகள் மராட்டிய நாட்டின் முக்கிய பகுதிகளாக காணப்பட்டன. காடுகள் சூழ்ந்த குன்றங்கள் இயற்கைக் கோட்டைகளாக எதிரிகளிடமிருந்து நாட்டினை பாதுகாத்தன. குன்றும், காடும் நிறைந்த இந்த கடினமான பிரதேசத்தில் ஆங்காங்கு காணப்பட்ட கணவாய்கள் ஊடுருவிச் செல்ல எளிதாயிருந்தன. இத்தகைய இயற்கை அரண்களாலான புவியியல் அமைப்பு மராட்டியரை அந்நியராதிக்கத்திலிருந்து பாதுகாத்தது. இதனை சாதகமாக பயன்படுத்தி மராட்டியர்கள் எழுச்சி பெற்றுக்கொண்டனர்.

14ஆம் 15ஆம் நூற்றாண்டுகளில் வடநாடு பூராக பரவிய பக்தி இயக்கம் 17ஆம் நூற்றாண்டில் மராட்டிய நாட்டிலும் செல்வாக்கு பெற்றுக் கொண்டது. சமகாலத்தில் மக்களின் சமய உணர்ச்சி அதிகரிக்கலானது. ஏசுநாதர், துக்காராம் முதலியோர் இந்து சமய பக்தியின்பால் மக்களைத் தூண்டினர். மக்களிடையே சமயத்தின்பால் பற்று ஏற்படலாயிற்று. பக்தி இயக்கமானது சமயத்தினை அடிப்படையாக கொண்டு இந்துக்களை மராட்டிய நாட்டில் ஒன்றுபடுத்திற்று. மராட்டியர் இலக்கியமானது பொதுமக்களும் கற்றுணருகின்ற வகையில் எழுதப்பட்டது. இவ்விலக்கியத்தின் மூலம் மக்கள் மராட்டிய தேசியத்தை வளர்த்துக்கொண்டனர். மராட்டியரிடையே காணப்பட்ட வீர உணர்வும் சமயத்தினைக் காக்க வேண்டும் என்ற பற்றும் மராட்டியரை வலுப்படுத்தியது. வீர உணர்வானது மறுமலர்ச்சியின் வெளிப்பாடாகவும், போரில் ஈடுபாடு கொண்ட இந்து சமயத்தின் புறத்தோற்றமாகவும் தோன்றியது. ராமதாஸர் என்பாரும் இந்து தர்மத்தினைக் பாதுகாத்து அதற்கு புத்துயிர் அளித்து அதனை புதியதொரு சக்தியாக மாற்றியமைத்தார். இவரது செயற்பாடுகள் இந்துக்களிடத்து ஊக்கத்தை அளித்ததுடன் முஸ்லிம்களின் ஆதிக்கத்தினை மட்டுப்படுத்தும் எண்ணம் தோன்றவும் காரணமாயிற்று.