மனிதனுக்கு அல்லது மனிதனால் வளர்க்கப்படும் விலங்குகள், பயிரிடப்படும் பயிர்கள்,பொருட்கள் ஆகியவற்றுக்குத் தீங்கு விளைவிப்பதன் மூலம் பொருளாதாரரீதியில் தாக்கத்தை ஏற்படுத்தும் உயிரிகளே பீடைகளாகும்.
பீடைகள் பிரதானமாக மூன்று தொகுதிகளாக வகைப்படுத்தப்படும்.
1. பூச்சிகளும் பூச்சிகளல்லாத விலங்குகளும்.
2. களைகள்
3. நோயாக்கிகள்
பீடை நிலைமை ஏற்படல்
இயற்கைச் சூழற்றொகுதியிலுள்ள விலங்குகளும் தாவரங்களும்; பல்வேறுஇடைத்தொடர்புகள் மூலம் சூழற்றொகுதியின் சமநிலையைப் பேணும். இது இயற்கைச் சமநிலை எனப்படும். இச்சமநிலை பேணப்படுவதற்கு உணவூ, காலநிலை நிலைமை, உயிரிகளிடையே நிகழும் போட்டி, உயிரிகளிடையேயான இடைத்தொடர்புகள் போன்றன முக்கியமானவையாகும்.
உயிரிகளிடையே ஒட்டுண்ணியியல்பு, இரைகௌவல், ஒன்றியவாழ்வூ, நோய்வாய்ப்படல் போன்ற இடைத் தொடர்புகள் நிகழும். மேற்படி காரணிகளுள் ஒன்று அல்லது பலவற்றின் தாக்கத்தால் யாதேனும் உயிரியின்
குடித்தொகை அடர்த்தி அதிகரிக்குமானால் அல்லது குறையூமானால் ஏனைய காரணிகளின்
தாக்கத்தால், சிறிது காலத்தின் பின்னர் அது சமநிலையடையூம். இது இயலளவூச் சமநிலை மட்டம் எனப்படும். விவசாயநடவடிக்கைகளின் போது மேற்படி சூழற் காரணிகள் மாற்றமடைந்தால் சில உயிரிகளின் குடித்தொகை பெருமளவூ அதிகரிப்பதுடன் சிலவற்றின் குடித்தொகை பெருமளவில் குறைந்து போகும். இவ்வாறு அதிகரிக்கும் உயிரிகள் விவசாய நடவடிக்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பீடைகளாகலாம்.
குடித்தொகை அடர்த்தி அதிகரிக்குமானால் அல்லது குறையூமானால் ஏனைய காரணிகளின்
தாக்கத்தால், சிறிது காலத்தின் பின்னர் அது சமநிலையடையூம். இது இயலளவூச் சமநிலை மட்டம் எனப்படும். விவசாயநடவடிக்கைகளின் போது மேற்படி சூழற் காரணிகள் மாற்றமடைந்தால் சில உயிரிகளின் குடித்தொகை பெருமளவூ அதிகரிப்பதுடன் சிலவற்றின் குடித்தொகை பெருமளவில் குறைந்து போகும். இவ்வாறு அதிகரிக்கும் உயிரிகள் விவசாய நடவடிக்கைகளுக்குத் தீங்கு விளைவிக்கும் பீடைகளாகலாம்.
பீடை நிலைமை ஏற்படுவதற்கான காரணங்கள்
- விவசாய நடவடிக்கைகளுக்கென இயற்கைத் தாவரங்களை அழிக்கப்படல். இதனால் இயற்கைச் சூழலில் வாழும் அங்கிகள் அச்சூழலிலிருந்து அற்றுப்போதல்.
- பண்ணையில் உயிரிப் பல்வகைமை குறைவாகையால் இயற்கை எதிரிகள் குறைவடைதல்.
- பயிர்செய் நிலங்களில் தனியொரு பயிரை அல்லது தெரிவூசெய்த சில
- பயிர்வகைகளை மட்டும் பயிரிடல்.
- தொடர்ச்சியாக ஒரே பயிரைப் பயிரிடல்.
- பாரம்பரிய பயிர்ச்செய்கையைக் கைவிடல்.
- தாவரங்களையூம் விலங்குகளையூம் அகற்றுதல்.
பீடைக் கொள்ளை நிலை
குறுகிய காலப் பகுதியில் குறிப்பிட்ட பீடையின் குடித்தொகையானது பொருளாதாரச் சேத மட்டத்தை விட அதிகரித்து பெருமளவில் பொருளாதார ரீதியான தாக்கத்தை ஏற்படுத்தும் சந்தர்ப்பம் பீடைக் கொள்ளைநிலை எனப்படும். இந்நிலையில் பீடைக்கட்டுப்பாடு சிரமமாக அமைவதுடன் அதிக செலவூம் ஏற்படும். இந்நிலை ஏற்ப்படுவதற்கான காரணங்கள்- பிறிதொரு சூழலிலுள்ள புதிய ப+ச்சி இனமொன்று புதிய சூழலுக்கு வருதல்.
- விகாரம் காரணமாகக் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய பூச்சியினங்கள் உருவாதல்.
- அதிக பசளைப் பயன்பாடு காரணமாகத் தாவரப் பாகங்கள் சதைப்பற்றடைந்து
- மென்மையடைவதனால் அதில் தங்கி வாழும் அங்கிகளின் குடித்தொகை அதிகரித்தல்.
- அதிக விளைச்சலைக் கொண்ட பயிர்ப் பேதங்கள் பீடைகளுக்குக் குறைந்தளவில் தாக்குப் பிடித்தல்.
- முறையற்ற பீடைநாசினிப் பயன்பாடுஇ தொடர்ச்சியாக ஒரே பூச்சிநாசினியைப் பயன்படுத்தல் ஆகியன காரணமாகப் பூச்சிநாசினிகளுக்கு எதிர்ப்புத் தன்ம கொண்ட பூச்சியினங்கள் உருவாதல்.
- பீடைகளுக்குச் சாதகமான சூழல் நிலவூவதனால் அவை அளவூக்கதிகமாகப் பெருகுதல்.
- விவசாய இரசாயனப் பொருட்களின் பயன்பாடு காரணமாகக் குறிப்பிட்ட சூழலில் வாழும் பீடைகளின் இரைகௌவிகளும் ஒட்டுண்ணிகளும் அழிவடைவதனால் பூச்சிகள் அதிகம் பெருகுதல்.
நன்றி : தொழினுட்பக் கல்விப் பிரிவூ
விஞ்ஞான,தொழினுட்ப பீடம்
தேசிய கல்வ்வி நிறுவகம்
மகரகம
2013
விஞ்ஞான,தொழினுட்ப பீடம்
தேசிய கல்வ்வி நிறுவகம்
மகரகம
2013
No comments:
Post a Comment