Wednesday, October 15, 2014

உளவளத்துணையும் சிக்மண்ட் பிறைட்டின் உளப்பகுப்பாய்வு அணுகுமுறையும்


இன்றைய சமூக அமைப்பில் உளவளத் துணை முக்கியத்துவமான ஒரு துறையாகக் காணப்படுகின்றது. இன்று அதிகமானவர்களால் உச்சரிக்கப்படும் ஒரு வார்த்தையாக உளவளத் துணை என்ற சொல் காணப்படுகின்றது. இயற்கை அனர்தங்கள்இ போர்ச் சூழ்நிலைஇ மற்றும் மக்கள் மத்தியில் நிலவும் உளஇ சமூகப் பிரச்சினைகளும் இதன் முக்கியத்துவத்தினை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளன.

மனித வாழ்க்கையானது முரண்பாடுகள்இ பிரச்சினைகள் ஆகியவற்றோடு பின்னிப்பிணைந்த ஒன்றாக காணப் படுகின்றது. இயற்கை அனர்த்தங்கள்இ போர் வன்முறைகள்இ தனிமனினுக்கும் சமூகத்திற்கும் இடையே ஏற்படும் கருத்து வேற்றுமைகள் போன்றன மனிதனின் உடல்இ உளஇ குடும்ப நலன்களை பெரிதும் பாதிக்கின்றன.

உண்மையில் உளவளத் துணையின் நோக்கம் இவ்வாறான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி அளிப்பதாகும். இது மனிதனை ஆற்றுப்படுத்துகின்ற ஒரு வழிமுறை ஆகும். குறிப்பாக உணர்ச்சிக் சிக்கல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவும் சிகிச்சையும் அளித்தல் இதன் நோக்கமாக காணப்படுகின்றது.

பொதுவாக உளவளத்துணை என்னும் போது பிரச்சினைக்கு உட்பட்ட ஒரு நபருக்கு அவரிடமே மறைந்திருக்கும் வளமான திறன் கள்இ பலம் ஆகியவற்றை வெளிக்கொணர்வதன் மூலம் அவருக்கு அந்த பிரச்சினையை தீர்த்துக் கொள்வதற்கு வழியமைத்துக் கொடுக்கும் ஒரு முறை எனக் கூறலாம். இவ் உளவளத் துணையானது இன்றைய சமூகத்திற்கு ஏன் அவசியமானதாக காணப்படுகின்றது எனப் பார்ப்போமாயின் தனியாக தீர்க்க முடியாத பிரச்சினை ஒன்றிற்கு தீர்வொன்றை தேடிக் கொள்வதற்கு, தனியாள் ஆளுமையை கட்டி எழுப்புவதற்கு, பிரச்சினைக்குட்படுகின்ற சந்தர்ப் பங்களில் சரியான தீர்மானத்திற்கு வருவதற்கு,மற்றுமொருவருக்கு சொல்ல முடியாத விடயங்களை நம்பிக்கையான ஒருவரிடம் கூறுவதன் மூலம் உள்ளத்தினை அமைதிப்படுத்துவதற்கு, சரியான தீர்மானத்திற்கும் தீர்வுக்கும் வருவதற்கு போன்ற விடயங்களைக் குறிப்பிடலாம்.

உளவளத்துணை செயற்பாடானது பின்வரும் மூன்று வழிகளில் நடை பெறுகின்றது.
1. தனியாள் உளவளத்துணை
2. குடும்ப உளவளத்துணை
3. குழு உளவளத்துணை

இவ்வாறான உளவளத்துணை முறை களை குறிப்பிட்ட இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கு உளவியலாளர்களால் முன்வைக்கப்பட்ட உளவியல் அணுகு முறைகள் பெரிதும் உதவுகின்றன. அவ்வாறான அணுகு முறைகளுள் சிக்மன் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகு முறை முக்கியமானதாகக் காணப்படுகின்றது.

மனித நடத்தைக்கும் உள்ளத்தின் செயற்பாட் டிற்கும் உள்ள தொடர்பினை உளவியலாளர் களும்இ தத்துவவியலாளர்களும் கிரேக்க காலம் முதலே ஆராய்ந்து வந்து இருப்பதனைக் காணலாம். அவர்களுள் முதன்மையான வராக சிக்மண்ட் பிறைட் (ஷிபைசீரnனீ பிசலீரனீ) காணப்படுகின்றார். உளவளத்துணை தொடர்பாக இவரால் முன்வைக் கப்பட்ட அணுகுமுறைதான் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை (ஜிளலணீhழ தியெடலவiணீ திppசழயணீh) ஆகும்.

இவ் அணுகுமுறையின் படி ஒரு நபரின் நடத்தைக்கும்இ செயற்பாட்டிற்கும் உள்ளம் செல்வாக்கு செலுத்துகின்றது என்பதாகும். குறிப்பாக உளப் பிரச்சினை ஒன்று ஏற்பட்ட பின்னர் உள்ளம் செயற்படும் தன்மையை அடிப்படையாக வைத்து மனிதர்களின் செயற் பாடுகளும் அமைவதாகக் கூறப்படுகின்றது. இதற்கு அடிப்படையாக இருப்பது 'உள்ளம்' என்பதாகும். இவ்வாறு மனிதனுடைய நடத்தையில் செல்வாக்கு செலுத்தும் உள்ளத்தினை பிறைட் மூன்று பிரதான பகுதிகளாகப் பிரித்துள்ளார்.

1. நனவு மனம்
2. நனவடி மனம்
3. நனவிலி மனம்

பிறைட் தனது இறுதிக் காலப் பகுதிகளில் உள்ளத்தின் செயற்பாடுகளை வேறு முறைகளில் விளக்கியுள்ளார். தனது விளக்கத்தில் உள்ளத் தினை மூன்று பகுதிகளாக பிரித்துள்ளார்.
1. இட்
2. ஈகோ
3. சுப்பர் ஈகோ

இங்கு இட் என்பது ஒருவருக்கு பிறப்பிலே கிடைக்கும் ஒரு நிலையாகும். நீண்ட காலமாக ஞாபகத்தில் படிந்துள்ளவைகள் இட் மூலமாக வெளிப்படுவதாக பிறைட் கூறுகிறார். மேலும் யினீ எப்போதும் வாழ்வியல் இயல்பூக்கம்இ மரண இயல்பூக்கம் எனும் இரண்டு இயல்பூக்களின் அடிப்படையில் செயற்படுவதாகும் எனவும் பிறைட் கூறுகின்றார். ஈகோ என்பது ஒருவரது தர்க்க ரீதியில் அமையும் புத்தியாகும். சூழல் மற்றும் யினீ என்பவற்றுக்கிடையே நடைபெறும் முரண்பாடுகளை கட்டுப்படுத்தி உள்ளத்தினை சாதாரண நிலைக்கு கொண்டுவருதல் இதன் செயற்பாடாகும். சுப்பர் ஈகோ என்பது ஒழுக்கம்இ விழு மியம்இ மதம்இ கலாசாரம் என்பவற்றின் அடிப்படையில் வளரும் ஒன்றாகும். இது யினீ செய்யும் சமூக விரோத செயல்களை தடுப்பதற்கு முனையும்.

இவ்வாறு உள்ளத்தின் செயற்பாடு களை விளக்கிய பிறைட் இவ் அணுகு முறையினூடாக ஆளுமை தொடர்பாக வும் விளக்கி உள்ளார். ஒருவரது ஆளுமையை விளங்கிக் கொள்வதற்கு அவனது உணர்வுகள்இ மனப்பாங்குகள் போன்றவற்றை சரியான முறையில் விளங்கிக் கொள்ள வேண்டும் என பிறைட் கூறுகின்றார்.

பிறைட்டினால் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை விளக்கப்பட்டிருப்பதனை நாம் காணலாம். இவ் அணுகு முறை யானது உளவளத்துணை செயற்பாட்டி ற்கு அதிகமான பங்களிப்பினைச் செய்கின்றது எனக் கூறினால் அது தவறாகாது. உள ரீதியான பிரச்சினை ஏற்படுகின்ற போது இப்பிரச்சினைகளை ஆராயவும்இ உளவளத்துணை செயற்பாட்டினை இலக்கு நோக்கி மேற்கொள்வதற்கும் உதவுகின்றது. பிறைட் தனது கோட்பாட்டின் மூலம் பின்வரும் உளவளத்துணை நுட்பங்களை முன்வைத்திருந்தார்.

1. மனோவசியம்
2. சுயாதீன கூட்டுச் சேர்வு
3. கனவு விளக்கம்

இவற்றின் மூலமாக ஒரு நபரில் மறைந்திருக்கும் கருத்துக்களை பகுப்பாய்வு செய்வதற்கு பிறைட் முன்வந்து இருந்திருந்தார். இந் நுட்பங்களுள் மனோவசிய முறையானது பிற்பட்ட காலங்களில் பிறைட் கைவிட்டபோதிலும் சுயாதீனக் கூட்டுச் சேர்வு மூலம் மறைந்து கிடக்கும் பல அம்சங்களை தேடிக் கொள்வதில் வெற்றி கண்டுள்ளார்.

இவ்வாறே கனவு விளக்கமும் முக்கியமானதாக காணப்படுகின்றது. ஒரு நபர் காணும் கனவு களை குறியீடாகக் கொண்டு பகுப்பாய்வு செய்து பல அம்சங்களை பெற்றுக்கொள்ள பிறைட் முற்பட்டிருந்திருந்தார்.
இம் மூன்று நுட்பங்களும் உளவளத்துணையின் போது சேவைநாடியின் பிரச்சினைகளை இனம் கண்டு உளவளத் துணை செயற்பாட்டினை இலகுபடுத்த உதவும் என்பதில் ஐயம் இல்லை எனவேதான் பிறைட்டின் உளப் பகுப்பாய்வு அணுகுமுறை இன்று அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்றாகக் காணப்படுகின்றது.

No comments:

Post a Comment